Thursday 26 July 2012

அ.தி.மு.க., செயலாளர் மீது வழக்குப்பதிவு

அ.தி.மு.க., செயலாளர் மீது வழக்குப்பதிவு

திருநெல்வேலி : பொதுப்பணித்துறை மேற்பொறியாளரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய வழக்கில், நான்குநேரி சட்டசபை தொகுதி அ.தி.மு.க., செயலாளர் ஆர்.எஸ். முருகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நெல்லை மாவட்டம் நான்குநேரி சட்டசபை தொகுதி அ.தி.மு.க., செயலாளர் ஆர்.எஸ். முருகன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன், தாமிரபரணி வடிநில கோட்ட மேற்பொறியாளர் சந்திர சேகரன் என்பவரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக புகார் எழுந்தது. எனினும் இது குறித்து அப்போது வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை. இந்நிலையில், ஆர்.எஸ். முருகன் மீது போலீசார் இன்று திடீரென வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்திய ஆயுதச்சட்டம் 25(1)/டி என்ற பிரிவின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment