நடிகை மீது கல்வீச்சு! பட விழாவில் பரபரப்பு!!
முன்னாள்
இந்திய அழகியும், நடிகையுமான சாரா ஜேன் தியாஸ் மீது மர்ம நபர் ஒருவர்
கல்வீசி தாக்கினார். இதில் அவரது உதடு கிழிந்தது. சூட்டிங் ஸ்பாட்டில்
நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தீராத விளையாட்டுப் பிள்ளை
படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான நடிகை சாரா ஜேன் தியாஸ், தற்போது
பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். ஏக்தா கபூர் தயாரித்துள்ள கியா
சூப்பர் கூல் ஹைய் ஹம் என்ற இந்திப்படத்தில் சாரா காமெடி கதாபாத்திரத்தில்
நடித்துள்ளார். ரித்தேஷ் தேஷ்முக், துஷார் கபூர் மற்றும் நேகா சர்மா
ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் வரும் 27ம்தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் அறிமுக விழா
அரியானா மாநிலம் பரிதாபாத்தில் நடைபெற்றது. அப்போது சாரா, சக நடிகைகளுடன்
விழா மேடையில் அமர்ந்திருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர்
கூட்டத்திலிருந்து கல் வீசினார். இது சாராவின் உதட்டில் பட்டு உதடு
கிழிந்தது. இதனை தனது ட்விட்டர் தளத்தில் வேதனையுடன் தெரிவித்திருக்கிறார்
சாரா.
No comments:
Post a Comment