Wednesday 25 July 2012

கள்ளக்காதல் ஜோடி கொலையில் வாலிபர் கைது: முரண்பாடான காதலால் ஏற்பட்ட விபரீதம்

வேலூர்: அரக்கோணத்தில் கள்ளக்காதல் ஜோடியை கொலை செய்த வழக்கில், காட்பாடி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம், அரக்கோணம், அதுவுல்லா சாகிப் தெருவை சேர்ந்தவர் தீன தயாளன். இவரது மகள் ஷர்மிளா, 22, அகன்நகரை சேர்ந்த சதயதுல்லா மனைவி ஆஷா, 24, பள்ளுரை சேர்ந்தவர் மாதவன், 24. இவர்கள் மூவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். ஆஷாவும், மாதவனும் காதலித்து வந்தனர். இதற்கு ஆஷா வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இதை தொடர்ந்து ஆஷாவுக்கும், சதயதுல்லாவுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின் மாதவனும், ஆஷாவுக்கும் இடையில் கள்ளத்தொடர்பு நீடித்தது.
சந்திப்பு: ஷர்மிளாவின் வீட்டில் இருவரும் அடிக்கடி சந்தித்து வந்தனர். கடந்த, 15ம் தேதி, மாலை 6 மணிக்கு தீனதயாளன் வீட்டில், மாதவன், ஆஷா, ஷர்மிளா ஆகியோர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், உயிருக்கு போராடினர். இதில், ஆஷா, மாதவன் நிர்வாண நிலையில் இருந்தனர். அரக்கோணம் போலீசார் மூவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். 16ம் தேதி ஆஷா, மாதவன் இறந்தனர். ஷர்மிளா, வேலூர் சி.எம்.சி., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அரக்கோணம் டி.எஸ்.பி., சீத்தாராமன் தலைமையில் தனிப்படை போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கொலை நடந்த வீட்டில், மாதவன் மற்றும் ஷர்மிளாவின் அலைபேசிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
சகோதரர்: ஷர்மிளா அலைபேசிக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணில் இருந்து, அதிகளவு அழைப்பு வந்துள்ளது தெரியவந்தது. ஷர்மிளாவின் அலைபேசியில் பதிவான எண், வேலூர் காட்பாடியை சேர்ந்த ரோஸ்டன் கருணாகரன், 26, என்பவருடையது. இவர் ஷர்மிளாவுக்கு சகோதரர் முறை. கருணாகரனிடம், வடக்கு மண்டல ஐ.ஜி., கண்ணப்பன், எஸ்.பி., ஈஸ்வரன் ஆகியோர் விசாரணை செய்தனர். தங்கை முறை கொண்ட ஷர்மிளாவுடன், கருணாகரன், ஐந்து ஆண்டாக கள்ள உறவு வைத்திருந்தது தெரியவந்தது. ஆஷாவுக்கும், மாதவனுக்கும் இடையில் உள்ள கள்ள தொடர்பும், ஷர்மிளா வீட்டில் இருவரும் அடிக்கடி சந்திப்பதும், கருணாகரனுக்கு தெரியும். தன்னை மணந்து கொள்ளும்படி, ஷர்மிளா, கருணாகரனை வலியுறுத்தியுள்ளார். ஷர்மிளாவுக்கும், மாதவனுக்கும் கள்ளத் தொடர்பு இருக்குமோ என, சந்தேகப்பட்ட கருணாகரன், திருமணத்துக்கு மறுத்து, தட்டி கழித்து வந்துள்ளார். ஷர்மிளாவின் பெற்றோர், கடந்த 15ம் தேதி மாப்பிள்ளை பார்க்க சென்னைக்கு சென்றனர். ஷர்மிளா, கருணாகரனை அலைபேசியில் தொடர்பு கொண்டு, உடனே கிளம்பி வரும்படி கூறியுள்ளார். அன்று மாலை இரு சக்கர வாகனத்தில் அரக்கோணத்துக்கு கருணாகரன் வந்துள்ளார். அங்கு ஷர்மிளா, தன்னை உடனே திருமணம் செய்து கொள்ளும்படி, கருணாகரனை வலியுறுத்தியுள்ளார். அப்போது, ஷர்மிளா வீட்டின் மற்றொரு பெட்ரூமில் ஆஷாவும், மாதவனும் உல்லாசமாக இருந்தனர். ஏஞ்சல் என்ற பெண்ணுடன் திருமணம் செய்ய, நிச்சயம் செய்துள்ளதால், உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என, கருணாகரன் கூறியுள்ளார். இதில், இருவருக்கும் இடையில் வாக்கு வாதம் முற்றி, தகராறு ஏற்பட்டது. காய் நறுக்கும் கத்தியால் ஷர்மிளாவின் கழுத்தில் கருணாகரன் வெட்டியுள்ளார். ஷர்மிளா அலறியபடி கீழே விழுந்தார். இந்த சத்தத்தை கேட்டு, ஆஷாவுடன், மாதவன் நிர்வாண நிலையில், ரூமை திறந்து கொண்டு வெளியே வந்தார். கருணாகரன் அவரை எட்டி உதைத்து, கீழே தள்ளி, கையில் வைத்திருந்த கத்தியால் கழுத்து, தலையில் வெட்டினார். இதை பார்த்து கொண்டிருந்த ஆஷா, தன்னை போலீசில் காட்டிக் கொடுத்து விடுவாளோ என, நினைத்து, ஆஷாவின் கழுத்து, தலையில் கத்தியால் வெட்டினார். அவர்கள் அணிந்திருந்த ஆடைகளை கொளுத்தி விட்டு, கருணாகரன் தலைமறைவானார். கருணாகரனை நேற்று போலீசார் கைது செய்தனர். கருணாகரன், பி.எஸ்சி., பயோ கெமிஸ்டிரி முடித்து விட்டு, ஆசிரியர் பயிற்சியும் முடித்துள்ளார். வேலூர் தனியார் மருத்துவமனையில் எலக்ட்ரிஷியனாக பணிபுரிந்து வந்தார்.

No comments:

Post a Comment