Wednesday 25 July 2012

புகையை முகத்தில் ஊதியதால் ஓட ஓட விரட்டி வாலிபர் கொலை

சென்னை: சிகரெட் புகையை முகத்தில் ஊதியவரை ஓட ஓட விரட்டி கொலை செய்த வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கொருக்குப்பேட்டை, திருநாவுக்கரசு தோட்டம், முதலாவது தெருவை சேர்ந்த லோகநாதன் மகன் ஸ்ரீதர், 28. சென்னை துறைமுக ஒப்பந்த தொழிலாளி. நேற்று முன்தினம் மாலை பணி முடித்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் பசுவைய்யன் தெரு வழியாக வந்தார். பங்க் கடை அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்திய ஸ்ரீதர், சிகரெட் வாங்கி புகைத்துக்கொண்டிருந்தார். அங்கு ராமானுஜம் கூடம் தெருவை சேர்ந்த குமார், 19, தாமோதரன், 18, சதீஷ், 18 ஆகியோர் டீ குடித்துக் கொண்டிருந்தனர். ஸ்ரீதர் புகையை இழுத்து டீ குடித்துக்கொண்டிருந்த வாலிபர்கள் முகத்தில் விட்டதாக கூறப்படுகிறது. இதில் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. கைலாயத்தெருவில் புதிய கட்டடம் கட்டும் பணி நடந்து கொண்டிருந்தது. அங்கு கிடந்த கட்டைகளை எடுத்து வந்து, வாலிபர்கள் ஸ்ரீதரை பயங்கரமாகத் தாக்கினர். அவர் தப்பி ஓடினார். வாலிபர்கள் விட வில்லை. ஓட ஓட விரட்டினர். கட்டையால் சரமாரியாக தாக்கினர். அடி தாங்க முடியாமல் ஸ்ரீதர் ரத்த வெள்ளத்தில் விழுந்தார். இது குறித்து, அந்த பகுதிவாசிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்தனர். அதற்குள் ஸ்ரீதர் மரணம் அடைந்தார். அவரது உடலை கைப்பற்றி கொருக்குப்பேட்டை போலீசார், விசாரித்தனர். கொலை வழக்கு தொடர்பாக, குமார், தாமோதரன், சதீஷ் ஆகியோரை கைது செய்தனர்.

No comments:

Post a Comment