திருவள்ளூரில் 2 பேர் வெட்டிக்கொலை
திருவள்ளூர் : தனியார் தொழிற்சாலை கேண்டீனில் உள்ள சாப்பாடு கழிவுகளை
கொண்டு செல்வதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக 2 வாலிபர்கள் வெட்டிக்கொலை
செய்யப்பட்ட சம்பவம், திருவள்ளூர் பகுதியில் பெரும்பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் பகுதியில் தனியார் தொழிற்சாலை இயங்கி
வருகிறது. இங்குள்ள கேண்டீனில் மிஞ்சும் உணவுகழிவுகளை, வெண்பன்றி
வளர்ப்போர் எடுத்துச்செல்வது வழக்கமாகி உள்ளது. போலிவாக்கம் மற்றும்
வி.பி.ஆர். சத்திரம் பகுதிகளை சேர்ந்தவர்கள், இந்த உணவுக்கழிவுகளை
எடுத்துச் சென்று வந்தனர். இந்நிலையில், இவர்களுக்குள் ஏற்பட்ட
முன்விரோதம் காரணமாக, வி.பி.ஆர் சத்திரம் பகுதியை சேர்ந்த விஜய் மற்றும்
சின்னக் காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரகாஷ், உணவுக்கழிவுகளை எடுத்துக்
கொண்டிருக்கும் வேளையில், போலிவாக்கம் பகுதியை சேர்ந்த 6 பேர் கொண்ட
கும்பல், இவர்களை சரமாரியாக வெட்டிக்கொன்றது. எஸ்.பி. உள்ளிட்ட போலீஸ்
அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment